Mar 13, 2026
Thisaigal NewsYouTube
எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்
தற்போதைய செய்திகள்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.23-

மனித வள அமைச்சின் கீழ் செயல்படும் மனித வள மேம்பாட்டுக் கழகமான எச்ஆர்டி கோர்ப்பின் புதிய தலைமை செயல்முறை அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் அப்துல் அஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனம், இன்று ஜனவரி 23 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

பல்வேறு துறைகளில் பரந்த தலைமைத்துவ அனுபவம் கொண்ட டத்தோ முஹமட் ஷாமிர், நிறுவன மேலாண்மை மற்றும் வியூகத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிறந்த தடம் பதித்தவர் என்று எச்ஆர்டி கோர்ப் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக, தேசிய நுண்கடன் நிறுவனமான அமானா இக்தியார் மலேசியாவின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அங்கு செயல்பாடுகளை வலுப்படுத்துதல் மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டு முயற்சிகளை முன்னெடுத்ததில் டத்தோ முஹமட் ஷாமிர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

டத்தோ ஷாமிர், மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற மற்றும் பிராந்திய திட்டமிடலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இது கொள்கை திட்டமிடல் மற்றும் நிலையான மேம்பாடு ஆகியவற்றில் அவருக்கு நிபுணத்துவத்தை வழங்கியுள்ளது.

தேசிய முன்னுரிமைகள் மற்றும் மாறிவரும் உழைக்கும் வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், திறன் மேம்பாடு மற்றும் மனித மூலதன நிலைத்தன்மையை எச்ஆர்டி கோர்ப் தொடர்ந்து முன்னெடுத்து வரும் வேளையில் டத்தோ முஹமட் ஷாமிரின் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!