Mar 29, 2026
Thisaigal NewsYouTube
நகைக்கடை முதலாளி கடத்தப்பட்டதற்குக் காரணம் என்ன?
தற்போதைய செய்திகள்

நகைக்கடை முதலாளி கடத்தப்பட்டதற்குக் காரணம் என்ன?

Share:

கோத்தா பாரு, மே.26-

நகைக்கடை உயிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டதற்கு முக்கிய காரணம், 30 கிலோ தங்கத்தைத் திரும்ப ஒப்படைக்க மறுத்து விட்டார் என்று சந்தேகிக்கப்படுவதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோப் மாமாட் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை தும்பாட், பலேக்பாங்கில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 44 வயதுடைய அந்த நகைக்கடை முதலாளி, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட 30 கிலோ தங்கத்தைத் திரும்ப ஒப்படைக்க மறுத்து விட்டதன் காரணமாக அதற்கான பணத்தைக் கேட்டு, தனிநபர்களை உள்ளடக்கிய ஒரு கும்பல், அவரைக் கடத்திச் சென்றுள்ளன.

எனினும் போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக அந்த நகைக்கடை உரிமையாளர் அன்றைய தினமே விடுவிக்கப்பட்டுள்ளார் என்று டத்தோ யூசோப் தெரிவித்தார்.

Related News