Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வெள்ளப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும், அரிச்சந்திரன்
தற்போதைய செய்திகள்

வெள்ளப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும், அரிச்சந்திரன்

Share:

கெடா, லூனாஸ் வட்டாரத்தில் பல இடங்களில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களை பெரும் சிரமத்தில் ஆழ்த்தி வரும் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்று லூனாஸ் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சி. அரிச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

லூனாஸ், தாமான் கிஜாங்கில் இன்று தமது தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கிய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் அதிகாரியான அரிச்சந்திரன், அப்பகுதி மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்னையை கேட்டறிந்த போது, வெள்ளப்பிரச்னை, ஒரு தொடர்கதையாக இருந்து வருவதாக புகார் அளித்துள்ளனர என்றார்.

வெள்ளப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமானால் நிச்சயம் கெடா மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும். அந்த வகையில் இம்மாதம் 12 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் லூனாஸ் சட்டமன்ற உறுப்பினராக தாம் தேர்வு செய்யப்பட்டால் தாமான் கிஜாங் பகுதியில் மக்கள் எதிர்நோக்கி வரும் வெள்ளப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று அரிச்சந்திரன் உறுதி அளித்தார்.

வடிக்கால்களை சீரமைத்தல், கால்வாய்களில் தூர்வாறுதல் உள்ளிட்டு பல பணிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் லூனாஸ் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக தாம் தேர்வு செய்யப்பட்டால் இப்பிரச்னைகளை முன்வைத்து, மக்களின் குரலாக சட்டமன்றத்தில் ஒலிக்கப் போவதாக முன்னாள் தேர்தல் அதிகாரியான அரிச்சந்திரன் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்