கூலிம், லுனாஸ், தாமான் இன்டாஸ்திரியில் உள்ள மறு சுழற்சி தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில், அத்தொழிற்சாலை 90 விழுக்காடு வரை எரிந்து நாசம் அடைந்ததாக கெடா மாநில தீயணைப்பு, மீட்பு துறையின் தலைமை அதிகாரி அவாங் ஹிட்ஸீல் அவாங் பூஜாங் தெரிவித்தார் .
நேற்றிரவு 11.45 மணி அளவில் கிடைத்த அவரச அழைப்பைத் தொடர்ந்து, அவ்விடத்திற்கு விரைந்த 18 தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுப்பட்டனர். மேலும், பினாங்கு மாநிலத்திலிருந்து 17 தன்னார்வ தீயணைப்பு குழுக்களும் இதில் ஈடுப்பட்டதாக அவாங் ஹிட்ஸீல் குறிப்பிட்டார்.
மேலும், அத்தொழிற்சாலை அருகில் இருந்த மற்றொரு தொழிற்சாலையும் இத்தீயினால் பாதிக்கப்பட்டதாகவும், தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related News

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு


