கூலிம், லுனாஸ், தாமான் இன்டாஸ்திரியில் உள்ள மறு சுழற்சி தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில், அத்தொழிற்சாலை 90 விழுக்காடு வரை எரிந்து நாசம் அடைந்ததாக கெடா மாநில தீயணைப்பு, மீட்பு துறையின் தலைமை அதிகாரி அவாங் ஹிட்ஸீல் அவாங் பூஜாங் தெரிவித்தார் .
நேற்றிரவு 11.45 மணி அளவில் கிடைத்த அவரச அழைப்பைத் தொடர்ந்து, அவ்விடத்திற்கு விரைந்த 18 தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுப்பட்டனர். மேலும், பினாங்கு மாநிலத்திலிருந்து 17 தன்னார்வ தீயணைப்பு குழுக்களும் இதில் ஈடுப்பட்டதாக அவாங் ஹிட்ஸீல் குறிப்பிட்டார்.
மேலும், அத்தொழிற்சாலை அருகில் இருந்த மற்றொரு தொழிற்சாலையும் இத்தீயினால் பாதிக்கப்பட்டதாகவும், தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related News

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

2.5 பில்லியன் ரிங்கிட் பணமோசடி புகார்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஐஜேஎம் (IJM) நிறுவனத்தின் 2 உயர்மட்ட நிர்வாகிகள்


