Feb 18, 2026
Thisaigal NewsYouTube
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைப்பு
தற்போதைய செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Share:

குவாந்தான், பிப்ரவரி.18-

குவாந்தான், தாமான் செராதிங் டாமாய் பகுதியில் நிகழ்ந்த நெஞ்சை உலுக்கும் சம்பவத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் உடல்களும், இன்று மதியம் 2.30 மணியளவில் பிரேதப் பரிசோதனை முடிந்து இறுதிச் சடங்கிற்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தெங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத் துறையில் n மேற்கொண்ட ஆய்வின்படி, முதல் உடல் மதியம் 2.50 மணியளவில் வெளியே கொண்டு வரப்பட்டது. பின்னர், நான்கு வேன்கள் மூலம் ஐவரின் உடல்களும் போலீஸ் துறை வாகனங்களின் பாதுகாப்புடன் மதியம் 3.10 மணியளவில் மருத்துவமனை வளாகத்திலிருந்து கொண்டுச் செல்லப்பட்டன.

ஐவரின் உடல்கள் செராதிங் பள்ளிவாசலுக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, அங்கு தொழுகை நடத்தப்பட்ட பிறகு, செராதிங் முஸ்லீம் மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டன.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், பாதுகாப்பு அதிகாரி ஒருவர், தனது மனைவி, தாய் மற்றும் இரண்டு குழந்தைகளைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி விட்டு, பின்னர் தானும் காயப்படுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது.

Related News

சமரசம் கிடையாது: ஜோகூர் அரசு நிறுவனங்களில் ஊழலுக்கு இடமில்லை - மலேசிய மாமன்னர் எச்சரிக்கை

சமரசம் கிடையாது: ஜோகூர் அரசு நிறுவனங்களில் ஊழலுக்கு இடமில்லை - மலேசிய மாமன்னர் எச்சரிக்கை

JustGO செயலி: 2 லட்சம் பேர் பதிவிறக்கம் - புதிய தானியங்கி டோல் கட்டண முறை அறிமுகம்

JustGO செயலி: 2 லட்சம் பேர் பதிவிறக்கம் - புதிய தானியங்கி டோல் கட்டண முறை அறிமுகம்

தன்னார்வ அமைப்பின் கூடாரம் பறிமுதல்: டிபிகேஎல்லின் நேர்மையைக் கேள்வி கேட்கும் ஃபிர்டாவுஸ் வோங்

தன்னார்வ அமைப்பின் கூடாரம் பறிமுதல்: டிபிகேஎல்லின் நேர்மையைக் கேள்வி கேட்கும் ஃபிர்டாவுஸ் வோங்

சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்: பட்டாசு வெடித்ததில் இளைஞரின் கால் துண்டானது

சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்: பட்டாசு வெடித்ததில் இளைஞரின் கால் துண்டானது

ஜப்பானில் கைது செய்யப்பட்ட மலேசிய இளைஞர்: வழக்கறிஞரை நியமித்தது குடும்பம்

ஜப்பானில் கைது செய்யப்பட்ட மலேசிய இளைஞர்: வழக்கறிஞரை நியமித்தது குடும்பம்

கட்டாய மரண தண்டனை ரத்து: சமூகத்தில் பெருகும் குற்றங்களும் நீதிக்கான கேள்விகளும்

கட்டாய மரண தண்டனை ரத்து: சமூகத்தில் பெருகும் குற்றங்களும் நீதிக்கான கேள்விகளும்