Aug 28, 2026
Thisaigal NewsYouTube
புகைமூட்டம் காரணமாக பிரதமரின் தேசிய தின உரை இடமாற்றம்
தற்போதைய செய்திகள்

புகைமூட்டம் காரணமாக பிரதமரின் தேசிய தின உரை இடமாற்றம்

Share:

நாட்டில் நிலவி வரும் புகைமூட்டம் காரணமாக, வரும் ஞாயிற்றுக்கிழமை, கோலாலம்பூர் மெர்தேக்கா சதுக்கம்-வில் நடைபெறவிருந்த பிரதமரின் தேசிய தின உரை, புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தேசிய தின அணிவகுப்பு நடைபெறுமா? என்பது தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில், சுகாதார அமைச்சு, சுற்றுச்சூழல் துறை, மலேசிய வானிலை ஆய்வுத் துறை ஆகியவை ஆலோசனை நடத்தி முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா வெளியிட்டுள்ள தகவலின் படி, நேற்று ஆகஸ்ட் 27 முதல் வரும் ஆகஸ்ட் 31 -ஆம் தேதி வரை பல பகுதிகளில் புகைமூட்டம் நீடிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சரவாக் மாநிலத்தின் பல மாவட்டங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாகவும், சில இடங்களில் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டும் அபாயம் உள்ளதாகவும் மெட் மலேசியா தெரிவித்துள்ளது.

Related News

தேசிய தின மனித உருவ காட்சி அமைப்பு பாதுகாப்பானது – அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் விளக்கம்

தேசிய தின மனித உருவ காட்சி அமைப்பு பாதுகாப்பானது – அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் விளக்கம்

இதய நோயால் 11 வயது மாணவி உயிரிழப்பு: ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க ஆசிரியர் கட்டாயப்படுத்தியதாக புகார்

இதய நோயால் 11 வயது மாணவி உயிரிழப்பு: ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க ஆசிரியர் கட்டாயப்படுத்தியதாக புகார்

பேராக் மாநிலம் தெமெங்கோர் பகுதியில் 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

பேராக் மாநிலம் தெமெங்கோர் பகுதியில் 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

வெளிநாட்டு தொழிலாளர் கோட்டா ஒதுக்கீடு: டத்தோஸ்ரீ எம். சரவணன் மீது 1.097 மில்லியன் ரிங்கிட் லஞ்சக் குற்றச்சாட்டு

வெளிநாட்டு தொழிலாளர் கோட்டா ஒதுக்கீடு: டத்தோஸ்ரீ எம். சரவணன் மீது 1.097 மில்லியன் ரிங்கிட் லஞ்சக் குற்றச்சாட்டு

டெங்கிலிருந்து புஸ்பென் மையத்திலிருந்து 2 கைதிகள் தப்பியோட்டம் - தீவிரத் தேடுதல் வேட்டை

டெங்கிலிருந்து புஸ்பென் மையத்திலிருந்து 2 கைதிகள் தப்பியோட்டம் - தீவிரத் தேடுதல் வேட்டை

டேசா பார்க் சிட்டி அடுக்குமாடியில் பயங்கரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு

டேசா பார்க் சிட்டி அடுக்குமாடியில் பயங்கரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு