சிலாங்கூர் மாநிலம் டேங்கில் பகுதியில் உள்ள போதைப்பொருள் அடிமைத்தனம் மீட்பு மையமான புஸ்பென்-இல் இருந்து, நேற்று காலை இரண்டு கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருவரும் காலை 8.40 மணியளவில், அந்த மையத்திலிருந்து தப்பிச் சென்றதாக சேபாங் மாவட்ட துணை போலீஸ் தலைவர் மீயோர் முகமது நூர் அசுவான் அலியாஸ் தெரிவித்துள்ளார்.
தப்பியோடிய இருவரையும் கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, தேசிய போதைப் பொருள் தடுப்பு முகமையான ஏஏடிகே-வின் தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜூசோ, தப்பிச் சென்ற இருவரும் டெங்கில் புஸ்பென் மையத்திற்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றில் இருந்து வாகனம் ஒன்றைத் திருடி தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
திருடப்பட்ட அந்த வாகனம் பின்னர், சிலாங்கூர் பெரானாங் பகுதியில் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








