பேராக் மாநிலத்தின் தெமெங்கோர், கிரிக் பகுதியில் நேற்று நள்ளிரவு 3.4 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மெட் மலேசியா வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கமானது இன்று அதிகாலை 12.06 மணியளவில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலநடுக்கத்தின் மையப்பகுதியானது உலு பேராக் பகுதியில் இருந்து வடகிழக்கே 9 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கிரிக் பகுதியிலும் உணரப்பட்டதாக மெட் மலேசியா தெரிவித்துள்ளது.
எனினும், சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.








