Aug 28, 2026
Thisaigal NewsYouTube
பேராக் மாநிலம் தெமெங்கோர் பகுதியில் 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்
தற்போதைய செய்திகள்

பேராக் மாநிலம் தெமெங்கோர் பகுதியில் 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

Share:

பேராக் மாநிலத்தின் தெமெங்கோர், கிரிக் பகுதியில் நேற்று நள்ளிரவு 3.4 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

மெட் மலேசியா வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கமானது இன்று அதிகாலை 12.06 மணியளவில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலநடுக்கத்தின் மையப்பகுதியானது உலு பேராக் பகுதியில் இருந்து வடகிழக்கே 9 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கிரிக் பகுதியிலும் உணரப்பட்டதாக மெட் மலேசியா தெரிவித்துள்ளது.

எனினும், சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related News

தேசிய தின மனித உருவ காட்சி அமைப்பு பாதுகாப்பானது – அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் விளக்கம்

தேசிய தின மனித உருவ காட்சி அமைப்பு பாதுகாப்பானது – அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் விளக்கம்

இதய நோயால் 11 வயது மாணவி உயிரிழப்பு: ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க ஆசிரியர் கட்டாயப்படுத்தியதாக புகார்

இதய நோயால் 11 வயது மாணவி உயிரிழப்பு: ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க ஆசிரியர் கட்டாயப்படுத்தியதாக புகார்

புகைமூட்டம் காரணமாக பிரதமரின் தேசிய தின உரை இடமாற்றம்

புகைமூட்டம் காரணமாக பிரதமரின் தேசிய தின உரை இடமாற்றம்

வெளிநாட்டு தொழிலாளர் கோட்டா ஒதுக்கீடு: டத்தோஸ்ரீ எம். சரவணன் மீது 1.097 மில்லியன் ரிங்கிட் லஞ்சக் குற்றச்சாட்டு

வெளிநாட்டு தொழிலாளர் கோட்டா ஒதுக்கீடு: டத்தோஸ்ரீ எம். சரவணன் மீது 1.097 மில்லியன் ரிங்கிட் லஞ்சக் குற்றச்சாட்டு

டெங்கிலிருந்து புஸ்பென் மையத்திலிருந்து 2 கைதிகள் தப்பியோட்டம் - தீவிரத் தேடுதல் வேட்டை

டெங்கிலிருந்து புஸ்பென் மையத்திலிருந்து 2 கைதிகள் தப்பியோட்டம் - தீவிரத் தேடுதல் வேட்டை

டேசா பார்க் சிட்டி அடுக்குமாடியில் பயங்கரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு

டேசா பார்க் சிட்டி அடுக்குமாடியில் பயங்கரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு