Mar 30, 2026
Thisaigal NewsYouTube
மாணவன் தாக்கப்பட்டது தொடர்பில் பத்து பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

மாணவன் தாக்கப்பட்டது தொடர்பில் பத்து பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

Share:

சிரம்பான், மே.11-

நெகிரி செம்பிலான், பாரோயில் ஐந்தாம் படிவ மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 17 முதல் 31 வயதுக்குட்பட்ட 10 பேர் இன்று முதல் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமட் ஹாட்டா சீ டின் கூறுகையில், சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காவல் விண்ணப்பம் செய்யப்பட்டது எனவும், அனைத்து சந்தேக நபர்களும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

விசாரணையை நிறைவு செய்வதற்காக எதிர்வரும் புதன்கிழமை வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில சந்தேக நபர்களைத் தேடும் பணியும் தொடர்கிறது. சம்பவம் தொடர்பான படங்கள் அல்லது காணொளிகளைச் சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அவர் நினைவூட்டினார்.

Related News

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது