இந்தியா , சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் மலேசியாவிற்கு வருகை புரிவதற்கு 30 நாட்களுக்கு விசா விலக்களிப்பு சலுகையை மலேசிய அரசாங்கம் அறிவித்து மூலம் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு உத்வேகம் அளிக்கப்பட்டுள்ளது என்று மாட்டா எனப்படும் மலேசிய சுற்றுலாப் பயண நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ முகமட் காலிட் ஹாருன் தெரிவித்துள்ளார்.
இந்த 30 நாள் விசா விலக்களிப்பு சலுகையானது சீனா, இந்தியா, துருக்கி முதலிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளுக்கு ஆதாயத்தை தரவல்ல சுற்றுலாப் பயண இலக்காக மலேசியாவை முன்னிறுத்தும் என்று முகமட் காலிட் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்தியா, சீனா, ஜோர்டான், துருக்கி முதலிய நாடுகளை சேர்ந்த சுற்றுப்பயணிகள் மலேசியாவிற்கு வருகை புரிவதற்கு வரும் டிசம்பர் முதல் தேதியிலிருந்து 30 நாள் விசா விலக்களிப்பு வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ள இந்த சலுகையானது, மலேசிய சுற்றுலாத்துறைக்கு மற்றொரு மைல்கல்லாகும் என்று முகமட் காலிட் வர்ணித்துள்ளார்.








