Dec 3, 2025
Thisaigal NewsYouTube
காதலி கொலை வழக்கு: குற்றத்தை ஒப்புக் கொண்டார் மாணவர்
தற்போதைய செய்திகள்

காதலி கொலை வழக்கு: குற்றத்தை ஒப்புக் கொண்டார் மாணவர்

Share:

கிள்ளான், செப்டம்பர்.29-

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கர்ப்பிணியான தனது காதலியைத் தீயிட்டு, கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர் ஒருவர், அந்த குற்றத்தை ஒப்புக் கொள்வதாக கிள்ளான் உயர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.

22 வயது முகமட் ஃபக்ருல் ஐமான் சஜாலி என்ற அந்த மாணவர், குற்றத்தை ஒப்புக் கொள்வது மூலம் எதிர்கொள்ளவிருக்கும் தண்டனையின் தன்மை குறித்து விளக்கப்பட்ட போதிலும் அந்த மாணவர், குற்றத்தை ஒப்புக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் என்று அவரின் வழக்கறிஞர் முகமட் நோர் தம்ரின் தெரிவித்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி காலை 8 மணியளவில் சிலாங்கூர், சுங்கை பெசார், ஜாலான் சுங்கை லீமாவில் தனது காதலியான 21 வயது நுர் அனிசா அப்துல் வாஹா என்பவரைத் தீயிட்டுக் கொன்றதாக அந்த மாணவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த மாணவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்