ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளின் கழுத்தை மிதித்து கொன்ற குற்றத்திற்காக தந்தை ஒருவருக்கு சிரம்பான் உயர் நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்தது. 41 வயது முகமது அப்துல்லா முகமது என்ற அந்த நபர், தனக்கு எதிரான கொலை குற்றச்சாட்டில் நியாயமான சந்தேகங்கள் இருப்பதை நிரூபிக்கத் தவறியத்தைத் தொடர்ந்து அவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பதாக நீதிபதி ரோஹானி இஸ்மாயில் தெரிவித்தார்.
முன்னாள் இராணுவ வீரரான அப்துல்லா முகமது, கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் போர்ட்டிக்சன், லுக்குட்டில் உள்ள தனது வீட்டில் நூர் ஐனா நபிஹா என்ற தமது ஒன்பது வயது மகளை சித்ரவதை செய்து கொன்றதாக அந்நபர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
தமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சம்பந்தப்பட்ட நபர் மறுக்கிறாரே தவிர அவை குறித்து விளக்கம் அளிக்க தவறிவிட்டார் என்று நீதிபதி ரோஹானி இஸ்மாயில் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


