ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளின் கழுத்தை மிதித்து கொன்ற குற்றத்திற்காக தந்தை ஒருவருக்கு சிரம்பான் உயர் நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்தது. 41 வயது முகமது அப்துல்லா முகமது என்ற அந்த நபர், தனக்கு எதிரான கொலை குற்றச்சாட்டில் நியாயமான சந்தேகங்கள் இருப்பதை நிரூபிக்கத் தவறியத்தைத் தொடர்ந்து அவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பதாக நீதிபதி ரோஹானி இஸ்மாயில் தெரிவித்தார்.
முன்னாள் இராணுவ வீரரான அப்துல்லா முகமது, கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் போர்ட்டிக்சன், லுக்குட்டில் உள்ள தனது வீட்டில் நூர் ஐனா நபிஹா என்ற தமது ஒன்பது வயது மகளை சித்ரவதை செய்து கொன்றதாக அந்நபர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
தமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சம்பந்தப்பட்ட நபர் மறுக்கிறாரே தவிர அவை குறித்து விளக்கம் அளிக்க தவறிவிட்டார் என்று நீதிபதி ரோஹானி இஸ்மாயில் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு


