Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் அதிரடிச் சோதனை: 92 வெளிநாட்டவர்கள் கைது!
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் அதிரடிச் சோதனை: 92 வெளிநாட்டவர்கள் கைது!

Share:

ஜோகூர் பாரு, நவம்பர்.30-

ஜோகூர், தாமான் தம்போய் இண்டா பகுதியில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், பல்வேறு துறைகளில் பணிபுரிந்த 92 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் அறிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் தையல் கடைகள், அழகு நிலையங்கள், உணவங்கள் உட்படப் பல வணிக வளாகங்களில் ஒரே நேரத்தில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் 19 இந்திய ஆண்கள், 19 மியான்மார் ஆண்கள், 4 இந்தியப் பெண்கள் உட்படப் பலர் அடங்குவர். இவர்கள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பது ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிடிபட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காகச் செத்தியா டுரோப்பிக்காவில் உள்ள குடிநுழைவுத் தடுப்புக் காவல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு