இன்று ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் காலையில் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகையுடன் பெருநாளை குதூகலமாக கொண்டாடி வருகின்றனர். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுமார் பத்தாயிரம் பேருடன் இணைந்து புத்ராஜெயா, மஸ்ஜிட் புத்ராவில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டார். பிரதமருடன் அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் காலை 8.20 மணியளவில் பள்ளிவாசலை வந்தடைந்தார். மலாய் பாரம்பரிய ஆடையில் காணப்பட்ட பிரதமர் தம்பதியர் மக்களுடன் மக்களாக இணைந்து ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
தியாகத்தின் பெருமைகளை குறிக்கும் வகையில் "தியாகத்தின் மதிப்பு: என்ற தலைப்பில் சிறப்பு உரையும் பள்ளி வாசலில் இடம் பெற்றது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


