இன்று ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் காலையில் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகையுடன் பெருநாளை குதூகலமாக கொண்டாடி வருகின்றனர். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுமார் பத்தாயிரம் பேருடன் இணைந்து புத்ராஜெயா, மஸ்ஜிட் புத்ராவில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டார். பிரதமருடன் அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் காலை 8.20 மணியளவில் பள்ளிவாசலை வந்தடைந்தார். மலாய் பாரம்பரிய ஆடையில் காணப்பட்ட பிரதமர் தம்பதியர் மக்களுடன் மக்களாக இணைந்து ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
தியாகத்தின் பெருமைகளை குறிக்கும் வகையில் "தியாகத்தின் மதிப்பு: என்ற தலைப்பில் சிறப்பு உரையும் பள்ளி வாசலில் இடம் பெற்றது.

Related News

6 வயதில் முதலாம் வகுப்பு -16 வயதில் மேல்நிலைக் கல்வி நிறைவு: கல்வி அமைச்சு தகவல்

ஐஜேஎம் நிறுவனத்தில் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் அதிரடிச் சோதனை: 15.8 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 55 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நிபோங் திபால் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர்கள் இருவர் கைது

நீலாய் நகைக் கடையில் ஆயுதமேந்திய கொள்ளை: இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

யுகே முதலீடு மோசடி குற்றச்சாட்டை மறுத்த ஐஜேஎம்: விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக அறிவிப்பு


