Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பத்தாயிரம் பேருடன் பிரதமர் சிறப்புத் தொழுகை
தற்போதைய செய்திகள்

பத்தாயிரம் பேருடன் பிரதமர் சிறப்புத் தொழுகை

Share:

இன்று ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் காலையில் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகையுடன் பெருநாளை கு​தூகலமாக கொண்டாடி வருகின்றனர். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுமார் பத்தாயிரம் பேருடன் இணைந்து புத்ராஜெயா, மஸ்ஜிட் புத்ராவில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டார். பிரதமருடன் அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் காலை 8.20 மணியளவில் பள்ளிவாசலை வந்தடைந்தார். மலாய் பாரம்பரிய ஆடையில் காணப்பட்ட பிரதமர் தம்பதியர் மக்களுடன் மக்களாக இணைந்து ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
தியாகத்தின் பெருமைகளை குறிக்கும் வகையில் "தியாகத்தின் மதிப்பு: என்ற தலைப்பில் சிறப்பு உரையும் பள்ளி வாசலில் இட​ம் பெற்றது.

Related News