Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பத்துமலைத் திருத்தல முதலாவது படிகட்டு, பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

பத்துமலைத் திருத்தல முதலாவது படிகட்டு, பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது

Share:

பத்துமலை திருத்தல தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முதலாவது படிக்கட்டு, நாளை ஜனவரி 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் 27 ஆம் தேதி சனிக்கிழமை வரையில் பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தைப்பூசத்தையொட்டி மேற்குகையில் குடிகொண்டு இருக்கும் வேலாயுதர் சன்னதிக்கு வழிபடவும், நேர்த்திக்கடனை செலுத்தவும் செல்லும் பக்தர்கள், படிகட்டில் வெறுங்காலுடன் செல்வதற்கு வசதியாக தனிப்படிக்கட்டு ஒதுக்கப்பட வேண்டும் என்று பக்தபெருமக்கள் விடுத்துள்ள கோரிக்கையைத் தொடர்ந்து தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜாவின் ஆலோசனையின் பேரில் மூன்று படிகட்டுகளில் முதலாவது படிகட்டு மட்டும், வெறுங்காலுடன் செல்லும் பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறங்காவலர் டத்தோ என். சிவகுமார் தெரிவித்தார்.

முதலாவது படிகட்டில் பக்தர்களும், பொதுமக்களும், செருப்பு மற்றும் காலணியுடன் செல்வதற்கு இக்காலக்கட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. காலணியின்றி செல்லும் பக்தர்கள் மட்டுமே முதல் படிக்கட்டை பயன்படுத்த முடியும். இந்த நடைமுறை நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை அமலில் இருக்கும் என்று டத்தோ சிவகுமார் அறிவித்துள்ளார்.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது