Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மக்கள் மைகாட்டை மாற்றிக் கொள்வதில் மகத்தான வரவேற்பு
தற்போதைய செய்திகள்

மக்கள் மைகாட்டை மாற்றிக் கொள்வதில் மகத்தான வரவேற்பு

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.26-

பெட்ரோல் ரோன் 95 எரிபொருள் லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசுக்கு விற்பனை செய்யப்படும் திட்டம், நாளை செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படவிருப்பதைத் தொடர்ந்து அவ்வகை பெட்ரோலை வாங்குவதற்கு முக்கிய ஆவணமாகப் பயன்படுத்தப்படும் மைகாட் அட்டையை மாற்றிக் கொள்வதில் மக்கள் காட்டி வரும், ஆர்வம் மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

உதாரணத்திற்கு, மைகாட்டில் சேதமுற்ற மென்பொருளைக் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி வரை மக்கள் இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என்று தேசிய பதிவு இலாகாவான ஜேபிஎன் அறிவித்தது முதல் சபாவில் 800 மைகாட் அட்டைகள் மாற்றப்பட்டு விட்டன என்று சைஃபுடின் குறிப்பிட்டார்.

பொதுவாகவே நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ஆயிரம் மைகாட் அட்டைகள் மாற்றப்படுகின்றன. மாதத்திற்கு சராசரி 30 ஆயிரம் மைகாட் அட்டைகள் மாற்றப்படும். ஆனால், சபாவில் ஓரிரு நாட்களில் 800 மைகாட் அட்டைகள் மாற்றப்பட்டுள்ளன என்றால் மக்களிடையே மகத்தான வரவேற்பு கிட்டியுள்ளது என்று சைஃபுடின் தெரிவித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்