Apr 2, 2026
Thisaigal NewsYouTube
டிஎன்பி விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது
தற்போதைய செய்திகள்

டிஎன்பி விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது

Share:

கோலாலம்பூர், மார்ச்.30-

ஈகைப் பெருநாள் பண்டிகையின் போது தீபகற்ப மலேசியா முழுவதும் மின்சாரம் சீராக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக தெனாகா நேஷனல் பெர்ஹாட் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. டிஎன்பியின் விநியோக வலையமைப்பு தலைமை நிர்வாக அதிகாரி மஹாதீர் நோர் இஸ்மாயில் குறிப்பிடுகையில், நாடு முழுவதும் மின்சார விநியோக வலையமைப்பை மேம்படுத்தும் பல திட்டங்களை நிறுவனம் செயல்படுத்தியுள்ளது என்றார். மேலும் கூடுதல் ஏற்பாடுகளாக முக்கிய இடங்களில் 271 நடமாடும் மின் உற்பத்தி ஜெனரேட்டர்களை நிறுவியுள்ளது.

மின்சாரம் சீராக விநியோகிக்கப்படுவதை உறுதிச் செய்வதற்காக நோன்புப் பெருநாள் பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி மூன்றாம் நாள் வரை 10,000க்கும் மேற்பட்ட டிஎன்பி ஊழியர்கள் 24 மணி நேரமும் தயாராக இருப்பார்கள். மின் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டால் டிஎன்பி தொழில்நுட்பக் குழுவினர் தொடர்ந்து கவனமாகக் கண்காணித்து, விரைவான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று அவர் கூறினார். மேலும், தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வீட்டை விட்டு வெளியேறும் போதும், திறந்த இல்ல உபசரிப்பை நடத்தும் போதும் மின்சார பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பயனர்களுக்கு மகாதீர் அறிவுறுத்தினார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்