ஈப்போ, ஜூன் 22-
கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் அபாயகர ஆயுதங்களை வைத்திருந்த மூன்று ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று காலை 6.10 மணியளவில் பொது மக்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து ஈப்போ,சுங்கை செனாம் என்ற இடத்தில் சந்தேகத்திற்குரிய வாகனம் ஒன்றை தடுத்து, போலீசார் சோதனை செய்த போது, அபாயகர ஆயுதங்கள் அந்த வாகனத்தில் கண்டு பிடிக்கப்பட்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் சைனால் அபிதீன் தெரிவித்தார்.
தவிர போலீசார் பயன்படுத்தும் சில சாதனங்களையும் அந்த காரிலிருந்து மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மூன்று சந்தேகப் பேர்வழிகளை கைது செய்தது மூலம் அண்மையில் ஈப்போ நிகழ்ந்த ஆயுதமேந்திய சில கொள்ளைச் சம்பவங்களுக்கு தீர்வு காண முடியும் என்று ஏசிபி அபாங் சைனால் அபிதீன் நம்பிக்கைத் தெரிவித்தார்.








