ஆகஸ்ட் 03-
சிறார்கள் சம்பந்தப்பட்ட சித்ரவதைகள் மற்றும் கவனிப்பின்மையை பார்க்கின்றவர்கள் அவை தொடர்பான காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதற்காக பதிவு செய்யாமல், நேரடியாக போலீசிடமோ அல்லது 15999 என்ற எண்ணிலோ புகார் அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சிறார்களுக்குஎதிராக இழைக்கப்படும் ஒரு கொடுமையை நேரில் பார்க்கும்போது அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதை சமூகம் உணர்ந்து இருக்க வேண்டும் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் Datuk Nancy Shukri கேட்டுக்கொண்டார்.
சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதை மட்டும் மக்கள் நோக்கமாக கொண்டிருக்கக்கூடாது. அதற்கு மேலாக சமூக கடப்பாடு என ஒன்று இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் Nancy Shukri வலியுறுத்தினார்.








