நெகிரி செம்பிலான், சுங்ஙாய் லிங்கி நீர் சுத்திரிப்பு மையத்தில் ஏற்பட்டுள்ள நீர் மாசுப்பாடு காரணமாக போர்ட்டிக்சனில் சில பகுதிகளிலும் சிரம்பான் வட்டாரத்திலும் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.
தேசிய குடிநீர் தரத்தை நிறைவு செய்யும் வகையில் குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்ட மாசுப்பாட்டினால் நீர் விநியோகம் இன்று காலை 10 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதான நீர் விநியோகிப்பு நிறுவனமான ஷாரிக்காட் ஆயிர் நெகிரி செம்பிலான் எஸ்டிஎன் பிஎச்டி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








