Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிகளில் நடக்கும் பகடி வதைக்கு எதிரான சிறப்புக் குழு அமைப்பு
தற்போதைய செய்திகள்

பள்ளிகளில் நடக்கும் பகடி வதைக்கு எதிரான சிறப்புக் குழு அமைப்பு

Share:

புத்ராஜெயா, ஆகஸ்ட்.29-

பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பகடி வதை மற்றும் வன்முறையைக் கட்டுப்படுத்த பல்வேறு அமைச்சகங்களின் முயற்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஒரு சிறப்புக் குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் இன்று கூறுகையில், “இக்குழுவின் முக்கியப் பணிகளில், விடுதி விதிமுறைகளைப் பரிசீலித்தல் மற்றும் பகடி வதைக்கு எதிரான தீர்ப்பாயம் அமைக்கும் வாய்ப்பை ஆராய்வது போன்றவை அடங்கும்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இச்சிறப்புக் குழுவின் முதல் கூட்டம் வரும் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

கடந்த மாதம் சபா, பாப்பாரில் பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த முதலாம் படிவ மாணவி ஸாரா கைரீனா மஹாதீரின் மரணத்திற்குப் பிறகு, பள்ளிகளில் நடக்கும் பகடி வதையைக் கட்டுப்படுத்த இச்சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு