Mar 29, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு மகன்களை வீட்டில் அடைத்து வைத்திருந்த தாயார் கைது
தற்போதைய செய்திகள்

இரண்டு மகன்களை வீட்டில் அடைத்து வைத்திருந்த தாயார் கைது

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 11-

தனது இரண்டு பிள்ளைகளை வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தாக கூறப்படும் மாது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளையில் அந்த மாதுவினால் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த இரண்டு பிள்ளைகளையும் போலீசார், அம்பாங் தமன் கோசாஸ் -ஸில் உள்ள ஒரு வீட்டிலிருந்து பாதுகாப்பாக போலீசார் மீட்டுள்ளனர்.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி அந்த வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் ஒரு வயது ஒரு மாதம் நிரம்பிய கைக்குழந்தை மற்றும் 6 வயது சிறுவன் ஆகியோர் மீட்கப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

உடம்புபிடி சேவையை நடத்தி வந்ததாக கூறப்படும் அந்த மாது, இரண்டு சிறார்களையும் நீண்ட காலமாகவே அந்தவீட்டிலேயே அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

Related News