Aug 7, 2026
Thisaigal NewsYouTube
நைஜீரிய ஆடவர் தூக்கில் இருந்து தப்பினார்
தற்போதைய செய்திகள்

நைஜீரிய ஆடவர் தூக்கில் இருந்து தப்பினார்

Share:

4 வருடங்களுக்கு முன்பு, செர்டாங் மருத்துவமனையின் தலைமை தாதியரை கொலைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நைஜீரிய ஆடவர் தூக்கில் இருந்து தப்பினார்.

40 வயதுடைய அந்த நைஜீரிய ஆடவருக்கு எதிராக விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்குப் பதிலாக அவருக்கு 35 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமை ஏற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ வசீர் அலாம் மைடின் மீரா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

அதே வேளையில் அந்நபருக்கு 12 பிரம்படித் தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அலோவொன்லே ஒலுவஜுவோன் கில்பெர்ட் என்ற அந்த நைஜீரியருடன் தங்கிருந்ததாக கூறப்படும் அந்த தலைமை தாதியரான சித்தி கைரினா, கடந்த 2019 ஆண்டு மே 15 ஆம் தேதி பிற்பகல் 2:30 மணியளவில் சைபர்ஜெயா, தேர்ட் எவெனு ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் கொலைச் செய்யப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரை கொலைச் செய்ததாக சம்பந்தப்பட்ட அந்நிய ஆடவர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!