4 வருடங்களுக்கு முன்பு, செர்டாங் மருத்துவமனையின் தலைமை தாதியரை கொலைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நைஜீரிய ஆடவர் தூக்கில் இருந்து தப்பினார்.
40 வயதுடைய அந்த நைஜீரிய ஆடவருக்கு எதிராக விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்குப் பதிலாக அவருக்கு 35 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமை ஏற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ வசீர் அலாம் மைடின் மீரா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
அதே வேளையில் அந்நபருக்கு 12 பிரம்படித் தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அலோவொன்லே ஒலுவஜுவோன் கில்பெர்ட் என்ற அந்த நைஜீரியருடன் தங்கிருந்ததாக கூறப்படும் அந்த தலைமை தாதியரான சித்தி கைரினா, கடந்த 2019 ஆண்டு மே 15 ஆம் தேதி பிற்பகல் 2:30 மணியளவில் சைபர்ஜெயா, தேர்ட் எவெனு ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் கொலைச் செய்யப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை கொலைச் செய்ததாக சம்பந்தப்பட்ட அந்நிய ஆடவர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


