Mar 25, 2026
Thisaigal NewsYouTube
குத்தகையாளர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

குத்தகையாளர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும்

Share:

ஜூலை 21-

அரசு திட்டமிட்டுள்ள திட்டங்களைச் குறித்த நேரத்தில் பூர்த்திச் செய்ய, குத்தகையாளர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என மலேசிய துணைப் பிரதமர் Datuk Seri Fadillah Yusof கேட்டுக் கொண்டுள்ளார் .

குத்தகையாளர்கள் அரசாங்கத் திட்டங்களை குறிக்கப்பட்ட காலக்கெடுவில் முடித்து, ஒப்புக்கொள்ளப்பட்ட விவரக்குறிப்புகள், தரநிலைகள் மற்றும் பட்ஜெட் போன்றவற்றின் அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்று உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று கூறினார்.

தான் அடிக்கடி அரசாங்க திட்டப்பகுதிக்குச் செல்ல வேண்டியிருந்தால், அந்தத் திட்டத்தில் சிக்கல்கள் இருக்கின்றன என்றே அர்த்தம். எனவே குத்தையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் முறையாகச் செயல்பட்டால், அரசாங்கம் அவர்களுக்கு முழுமையாக ஆதரவு அளிக்கும் என அவர் மேலும் கூறினார்.

Related News