எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் Penang Bridge International Marathon 2023” நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தை முன்னிட்டு நள்ளிரவு 12.01 முதல் காலை 10.00 மணி வரை பினாங்கு பாலம் தற்காலிகமாக மூடப்பட உள்ளது என வடக்குத் தெற்கு நெடுஞ்சாலை நிறுவனமாக PLUS அறிவித்துள்ளது.
காலை 10.00 மணிக்குப் பிறகு அந்தப் பாலம் வழக்கம் போல் சாலைப் பயனர்களுக்காகத் திறக்கப்படும் என அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே தீவுக்குச் செல்ல விரும்புகிறவர்கள் அல்லது தீவிலிருந்து தீபகற்கம் வர விரும்புகிறவர்கள், ஜம்பாத்தான் சுல்தான் அப்துல் ஹலிம் முவாட் சாம் ஷா என்றழைக்கப்படும் இரண்டாவது பாலத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அங்குள்ள போக்குவரத்து நிலவரம் குறித்து பொது மக்களுக்கு PLUS நிறுவனத்தின் டுவிட்டர் பக்கம், PLUS செயலி போன்றவற்றில் மிக அண்மையத் தகவல்கள் தெரிவிக்கப்படும்.








