சீனாவிற்கு 4 நாள் அதிகாரத்துவ பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது சீனா வருகையின் இரண்டாவது நாளான இன்று, உள்ளூர் நேரப்படி மாலை 4.28 மணியளவில் தலைநகர் பெய்ஜிங் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சீனா, ஹைனானில் நேற்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டின் ஆசியாவிற்கான போவா வருடாந்திர மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர், மதியம் 12.30 மணியளவில் ஹைனானிலிருந்து பெய்ஜிங்ற்குப் புறப்பட்டார்.
பிரதமரை, பெய்ஜிங் விமான நிலையத்தில் சீனாவிற்கான மலேசியாவின் துணைத் தூதர் சண்முகம் சுப்பிரமணியமும், சீன வெளியுறவு துணை அமைச்சர் சுன் வெய்டொங்கிற்கும் வரவேற்றனர்.
நாளை வெள்ளிக்கிழமை, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை மரியாதை நியமித்தமாக பிரதமர் அன்வார் சந்திக்கவிருக்கிறார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


