சீனாவிற்கு 4 நாள் அதிகாரத்துவ பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது சீனா வருகையின் இரண்டாவது நாளான இன்று, உள்ளூர் நேரப்படி மாலை 4.28 மணியளவில் தலைநகர் பெய்ஜிங் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சீனா, ஹைனானில் நேற்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டின் ஆசியாவிற்கான போவா வருடாந்திர மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர், மதியம் 12.30 மணியளவில் ஹைனானிலிருந்து பெய்ஜிங்ற்குப் புறப்பட்டார்.
பிரதமரை, பெய்ஜிங் விமான நிலையத்தில் சீனாவிற்கான மலேசியாவின் துணைத் தூதர் சண்முகம் சுப்பிரமணியமும், சீன வெளியுறவு துணை அமைச்சர் சுன் வெய்டொங்கிற்கும் வரவேற்றனர்.
நாளை வெள்ளிக்கிழமை, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை மரியாதை நியமித்தமாக பிரதமர் அன்வார் சந்திக்கவிருக்கிறார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


