சீனாவிற்கு 4 நாள் அதிகாரத்துவ பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது சீனா வருகையின் இரண்டாவது நாளான இன்று, உள்ளூர் நேரப்படி மாலை 4.28 மணியளவில் தலைநகர் பெய்ஜிங் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சீனா, ஹைனானில் நேற்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டின் ஆசியாவிற்கான போவா வருடாந்திர மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர், மதியம் 12.30 மணியளவில் ஹைனானிலிருந்து பெய்ஜிங்ற்குப் புறப்பட்டார்.
பிரதமரை, பெய்ஜிங் விமான நிலையத்தில் சீனாவிற்கான மலேசியாவின் துணைத் தூதர் சண்முகம் சுப்பிரமணியமும், சீன வெளியுறவு துணை அமைச்சர் சுன் வெய்டொங்கிற்கும் வரவேற்றனர்.
நாளை வெள்ளிக்கிழமை, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை மரியாதை நியமித்தமாக பிரதமர் அன்வார் சந்திக்கவிருக்கிறார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


