Aug 10, 2026
Thisaigal NewsYouTube
தேசியக் கீதத்தை மாணவர்கள் சீனமொழியில் பாடினார்களா? தவறான தகவலை வெளியிட்ட ரத்து நாகா கைது
தற்போதைய செய்திகள்

தேசியக் கீதத்தை மாணவர்கள் சீனமொழியில் பாடினார்களா? தவறான தகவலை வெளியிட்ட ரத்து நாகா கைது

Share:

ஈப்போ, ஏப்ரல்.10-

பேராவில் சீனப்பள்ளி ஒன்றில் மாணவர்கள், தேசியக் கீதத்தை சீனமொழியில் பாடினார்கள் என்று தவறான தகவலை வெளியிட்டு, இன நல்லிணக்கத்திற்கு ஊறுவித்ததாக நம்பப்படும் சமூக ஊடக பிரபல பெண்மணியான ஷாருல் ஏமா ரேனா அபு சாமா என்ற ரத்து நாகா கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பெண்மணியை பேரா மாநில போலீசார் கைது செய்து இருப்பதை அவரின் வழக்கறிஞர் ஸையிட் மாலேக் உறுதிப்படுத்தினார்.

தேசியக் கீதத்தை சீனப்பள்ளி மாணவர்கள், சீன மொழியில் பாடினார்கள் என்று குற்றஞ்சாட்டி, சமூக வலைத்தளங்களில் அந்தப் பெண்மணி வெளியிட்ட உள்ளடக்கம், பதிவேற்றம் செய்யப்பட்ட பத்தே நிமிடத்தில் அவர் அகற்றிவிட்டார்.

எனினும் அந்த பத்து நிமிடத்திற்குள் அந்த தவறான உள்ளடக்கம், ஆயிரக்கணக்கானோரிடம் சென்றடைந்ததைத் தொடர்ந்து அந்த உள்ளடக்கம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தனது செயலுக்காக அந்தப் பெண்மணி பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்ட போதிலும் அவர் வைரலாக்கிய அந்த உள்ளடக்கம், சீனப்பள்ளிகளுக்கு எதிராக தவறான தோற்றத்தை ஏற்படுத்தியது என்பதுடன் பலர் அது குறித்து விமர்சனமும், சர்சசையும் செய்வதற்கு வழிவகுத்தது.

பொய்யான ஒரு தகவலை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக பெர்க்காத்தான் நேஷனல் ஆதரவாளரான ரத்து நாகா, தற்போது நிந்தனை சட்டம் 233 ஆவது பிரிவு மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் கீழ் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி