தங்களின் சொத்து விவரத்தையும் அதை சேகரித்த முறையையும் விவரிக்க முடியாதவர்கள், துன் பட்டத்தைக் கொண்டிருந்தாலும் விசாரிக்கப்பட வேண்டும் என துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.
விளக்கம் கொடுக்க முடியாதவர்களின் சொத்துக்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என அவர் இரண்டாவது முறையாக வலியுறுத்தி இருந்தார்.
வெறும் சந்தேக அடிப்படை மட்டும் போதாது எனக் கூறிய மகாதீர், துன் பட்டம் கொண்டவர்களேயானாலும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். இல்லை எனில் அவர்கள் ஏதோ ஒன்றஒ மறைக்கிறார் எனப் பொருள்படுவதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.








