Mar 13, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பாக்காப் மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்: காவற்படையினர் தீவிர தேடுதல் வேட்டை!
தற்போதைய செய்திகள்

சுங்கை பாக்காப் மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்: காவற்படையினர் தீவிர தேடுதல் வேட்டை!

Share:

நிபோங் திபால், ஜனவரி.25-

பினாங்கு, சுங்கை பாக்காப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயதுடைய Clemont Siluasegram என்ற விசாரணைக் கைதி, கடந்த வியாழக்கிழமை மதியம் சுமார் 3.45 மணியளவில் தப்பியோடினார். வீடு புகுந்து திருடுதல், மோட்டார் சைக்கிள் திருட்டு ஆகிய வழக்குகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர், வலிப்பு நோய் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, நீலம் - வெள்ளை நிற மருத்துவமனை சீருடையுடன் தப்பியது தெரிய வந்துள்ளதாக பினாங்கு மாநிலக் காவற்படையின் துணைத் தலைவர் டத்தோ முஹமட் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்தார்.

கைதி தப்பியதில் அரசு ஊழியர்களின் கவனக்குறைவு ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும், தப்பியோடிய கைதி மீதும் காவற்படையினர் தனித்தனியாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த நபர் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக செபராங் பிறை செலாத்தான் மாவட்டத் தலைமையகத்தையோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளுமாறு டத்தோ முஹமட் அல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!