May 25, 2026
Thisaigal NewsYouTube
e-hailing ஓட்டுநர் கடுமையாக தாக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

e-hailing ஓட்டுநர் கடுமையாக தாக்கப்பட்டார்

Share:

அம்பாங்,அக்டோபர் 10-

காருக்குள் வாந்தி எடுத்ததற்காக கண்டித்த e-hailing வாகன ஒட்டுநர், இரு அந்நிய நாட்டவர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், கம்போங் சேரஸ் பாரு-வில் நிகழ்ந்தது. காயமுற்ற அந்த e-hailing ஓட்டுநர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து ஒரு பெண் உட்பட இரண்டு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்த சம்பவம் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி பின்னிரவு 12.40 மணியளவில் நிகழ்ந்துள்ளது என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கோலாலம்பூர் ஜாலான் சுல்தான் இஸ்மாயில் - லிருந்து கம்போங் சேரஸ் பாரு- ஆடம்பர அடுக்குமாடி வீட்டை நோக்கி அந்த இரு அந்நியர்களையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு e-hailing ஓட்டுநர் சென்று கொண்டிருந்த போது , அவ்விரு அந்நியர்களில் ஒருவர் காருக்குள்ளேயே வாந்தி எடுத்துள்ளார்.

சாலையோரத்தில் காரை நிறுத்திய வாகனமோட்டி, அது குறித்து கண்டித்ததைத் அவர், அந்த இரு நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஏசிபி முகமது ஆசம் குறிப்பிட்டார்.

Related News

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு