குளுவாங், ஜன.20-
ஜோகூர், ஜாலான் ஆயர் ஹீத்தாம் – குளுவாங் சாலை, தாமான் பஹாகியாவில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஒருவர் மரணமுற்றார். ஒரு குழந்தை உட்பட இதர ஐவர் காயமுற்றனர்.
நேற்றிரவு நிகழ்ந்த இச்சம்பவத்தில் டோயோட்டா அவான்சா வாகனமும், புரோட்டோன் சகா பிஎல்எம். ரக காரும் சம்பந்தப்பட்டு இருந்ததாக தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார். இதில் ஓர் குழந்தை உட்பட ஐவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.
இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்கும்ப இரவு 11.57 மணியளவில் நிறைவுப்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.







