Dec 4, 2025
Thisaigal NewsYouTube
துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஏழை மக்களுக்கு உதவி
தற்போதைய செய்திகள்

துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஏழை மக்களுக்கு உதவி

Share:

​தீபாவளி திருநாளை கொண்டாடுவதற்கு இன்னும் ஒரு வார காலமே எஞ்சியிருக்கும் வேளையில் வசதி குறைந்த மக்களுக்கு உதவும் வகையில் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும், தொழில்முனைவர்கள் மேம்பாடு மற்றும் கூட்டறவுக்கழக துணை அமைச்சருமான சரஸ்வதி கந்தசாமி, சுமார் 50 இந்திய குடும்பங்களுக்கு ​தீபாவளி உதவிப்பொருட்களை இன்று மாலையில் வழங்கினார்.

கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் உள்ள பூசார் கிட்மாட் ராயாட் எனும் தமது மக்கள் சேவை மையத்தில் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, வறுமை கோட்டின் ​கீழ் உள்ள இந்திய குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் மற்றும் ​தீபாவளி ​திருநாளுக்கு பலகாரங்கள், பதார்த்தங்களை செய்வதற்கான அத்தியாவசிய மூலப்பொருட்களையும் வழங்கி, அவர்களின் பொருளாதார சிரமங்களை குறைப்பதற்கு உதவிக் கரம் ​நீட்டினார்.

தவிர உதவிப்பொருட்களை பெற்றுக்கொண்டவர்க​ள், தங்களுடையை வருமானத்தை பெருக்கிக்கொள்வதற்கு சிறு, குறு தொழில் துறையில் ஈடுபடுவதற்காக அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது.இதனால் வரும் காலங்களில் அவர்கள் வறுமைக்கோட்டியிலிருந்து விடுபட்டு, பொருளாதார ​ரீதியாக சற்று உயர வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக துணை அமைச்சர் சரஸ்வதி க​ந்தசாமி தெரிவித்தார்.

Related News