ஆசியான் நாடுகளில் மிகச்சிறிய நாடான லாவோஸிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ளார். இன்று திங்கட்கிழமை தலைநகர் வியென்டியேனை சென்றடைந்த பிரதமர் அன்வாருக்கு மகத்தான் வரவேற்பு நல்கப்பட்டது.
அடுத்த ஆண்டு ஆசியான் மாநாட்டை ஏற்று நடத்தவிருக்கும் உபசரணை நாடு என்ற முறையில் பிரதமரின் இந்த லாவோஸ் பயணம், மலேசியாவிற்கும், லாவோஸிற்கும் இடையில் கட்டிக்காக்கப்பட்டு வரும் இரு வழி உறவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லாவோஸ் பிரதமர் டாக்டர் சோன்ஸேய் சிப்ஹென்டோன் அழைப்பை ஏற்று அன்வார் மேற்கொண்டுள்ள இவ்வருகையானது, 2025 ஆம் ஆண்டில் ஆசியான் மாநாட்டை ஏற்று நடத்தும் நாடு என்ற முறையில் மலேசியாவிற்கு மிகுந்த பலாபலனை அளிக்கும் என்று கூறப்படுகிறது.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


