மற்ற வாகனங்களின் டயர்களுக்குச் சேதத்தை விளைவிக்கும் தீய நோக்கத்துடன், காரிலிருந்து ஆணிகளை இரைத்துக்கொண்டு சென்ற நபரைப் போலீஸ் தேடி வருவதாக பத்து காஜா மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி முஹம்மட் ராய் சுஹைமி சரிஃப் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் காணொளி தொடர்பில், AJK 869 என்ற பதிவு எண்ணைக் கொண்ட காரின் உரிமையாளரைப் போலீசார் தேடிவருவதாக அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம், பத்து காஜா அருகில், பூசிங்கில் ஜாலான் ஈப்போ-லுமூட் சாலையின் சமிக்ஞை விளக்குப் பகுதியில் நிகழ்ந்ததாக அவர் கூறினார்.
இது தொடர்பாக போலீஸ் புகார் ஒன்று பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டமுஹம்மட் ராய், தமது காரின் டயர்கள் சேதமுற்றது குறித்து ஆடவர் ஒருவர் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


