மற்ற வாகனங்களின் டயர்களுக்குச் சேதத்தை விளைவிக்கும் தீய நோக்கத்துடன், காரிலிருந்து ஆணிகளை இரைத்துக்கொண்டு சென்ற நபரைப் போலீஸ் தேடி வருவதாக பத்து காஜா மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி முஹம்மட் ராய் சுஹைமி சரிஃப் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் காணொளி தொடர்பில், AJK 869 என்ற பதிவு எண்ணைக் கொண்ட காரின் உரிமையாளரைப் போலீசார் தேடிவருவதாக அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம், பத்து காஜா அருகில், பூசிங்கில் ஜாலான் ஈப்போ-லுமூட் சாலையின் சமிக்ஞை விளக்குப் பகுதியில் நிகழ்ந்ததாக அவர் கூறினார்.
இது தொடர்பாக போலீஸ் புகார் ஒன்று பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டமுஹம்மட் ராய், தமது காரின் டயர்கள் சேதமுற்றது குறித்து ஆடவர் ஒருவர் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


