Jan 19, 2026
Thisaigal NewsYouTube
மீண்டும் வருகிறதா ஜிஎஸ்டி? - 16-வது பொதுத்தேர்தலுக்குப் பின் அதிரடி மாற்றம்: அறிவித்தார் ஸாஹிட் ஹமிடி!
தற்போதைய செய்திகள்

மீண்டும் வருகிறதா ஜிஎஸ்டி? - 16-வது பொதுத்தேர்தலுக்குப் பின் அதிரடி மாற்றம்: அறிவித்தார் ஸாஹிட் ஹமிடி!

Share:

பட்டர்வொர்த், டிசம்பர்.21-

மலேசியாவில் மீண்டும் பொருள் சேவை வரியான ஜிட்ஸ்டி வரி முறையைக் கொண்டு வருவதே தேசிய முன்னணியின் உறுதியான நிலைப்பாடு என அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். தற்போதுள்ள விற்பனை சேவை வரி – எஸ்எஸ்டி வரி முறையை விட ஜிஎஸ்டி முறையே நாட்டின் வருமானத்தை அதிகரிக்கவும், மக்களுக்குப் பலன்களைச் சமமாகப் பகிர்ந்தளிக்கவும் உகந்த சிறந்த வழி என்று அவர் வாதாடியுள்ளார்.

16-வது பொதுத்தேர்தல் வரை இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அதுவரை தற்போதைய வரி முறைக்கு வாய்ப்பு வழங்கினாலும், தேர்தல் வெற்றிக்குப் பின் ஜிஎஸ்டியை மீண்டும் கொண்டு வர தேசிய முன்னணி அழுத்தம் கொடுக்கும் என்று அவர் சுட்டிக் காட்டினார். "எஸ்எஸ்டி வரி முறையினால் மக்கள் சிரமப்படுகிறார்கள், எனவே பழைய ஜிஎஸ்டி முறையையேக் கொண்டு வாருங்கள்" என்ற மலேசிய மக்கள் சக்தி கட்சியின் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் ஸாஹிட் இதனைத் தெரிவித்தார். கடந்த 2018-ல் நீக்கப்பட்ட இந்த வரி முறையை மீண்டும் கொண்டு வருவதாக மூலம், நாட்டின் பொருளாதார நிலையை வலுப்படுத்தி மக்களுக்குக் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்