Feb 26, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் காயு ஹித்தாம் எல்லைப் படை கமாண்டர் மீது துப்பாக்கிச் சூடு: 24 மணி நேரத்தில் சந்தேக நபர் கைது
தற்போதைய செய்திகள்

புக்கிட் காயு ஹித்தாம் எல்லைப் படை கமாண்டர் மீது துப்பாக்கிச் சூடு: 24 மணி நேரத்தில் சந்தேக நபர் கைது

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.26-

புக்கிட் காயு ஹித்தாம், மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் கமாண்டர் நசாருடின் நாசீர் செலுத்திய வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பப்படும் சந்தேக நபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று அதிகாலை நிகழ்ந்த இச்சம்பவத்தைத் தொடர்ந்து, 24 மணி நேரத்திற்குள்ளாகவே இந்த அதிரடிக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், எல்லைப் பாதுகாப்பில் அரசு ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

நேற்று அதிகாலை சுமார் 5.40 மணியளவில், கமாண்டர் நசாருடின் நாசீர் தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த கருப்பு உடை அணிந்த இருவர் அவரது வாகனத்தை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் தாக்குதலில் அவரது காரின் கதவுகள் சேதமடைந்த போதிலும், நசாருடின் நாசீர் காயமின்றி உயிர் தப்பினார்.

Related News

என் அன்பு மனைவி அஸிஸாவிற்கு 46-வது திருமண நாள் வாழ்த்துகள் - பிரதமர் அன்வார் இப்ராஹிம் நெகிழ்ச்சி

என் அன்பு மனைவி அஸிஸாவிற்கு 46-வது திருமண நாள் வாழ்த்துகள் - பிரதமர் அன்வார் இப்ராஹிம் நெகிழ்ச்சி

2025-ஆம் ஆண்டிற்கான ஈபிஎஃப் லாப ஈவு 6% முதல் 6.2% வரை அறிவிக்கப்படலாம்

2025-ஆம் ஆண்டிற்கான ஈபிஎஃப் லாப ஈவு 6% முதல் 6.2% வரை அறிவிக்கப்படலாம்

Boss ஹிந்தி திரைப்பட ஒளிபரப்பு விவகாரம்: ஆர்.டி.எம்-க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்

Boss ஹிந்தி திரைப்பட ஒளிபரப்பு விவகாரம்: ஆர்.டி.எம்-க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்

டோன்டோ கும்பலுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை – குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் எச்சரிக்கை

டோன்டோ கும்பலுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை – குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் எச்சரிக்கை

அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் போர் பதற்ற நிலை: மலேசியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் என வெளியுறவு அமைச்சு எச்சரிக்கை

அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் போர் பதற்ற நிலை: மலேசியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் என வெளியுறவு அமைச்சு எச்சரிக்கை

டிஜிட்டல் தொழில்துறைக்கு ஏற்ப பட்டதாரிகளின் திறனை மேம்படுத்த மனித வள அமைச்சு தீவிரம்: டத்தோஶ்ரீ ரமணன்

டிஜிட்டல் தொழில்துறைக்கு ஏற்ப பட்டதாரிகளின் திறனை மேம்படுத்த மனித வள அமைச்சு தீவிரம்: டத்தோஶ்ரீ ரமணன்