ஜப்பானுடன் நிதித் துறையில் புதிய ஒத்துழைப்பையும் கூட்டாண்மைகளையும் ஆராய்வதில் மலேசியாவும் ஆசியானும் உறுதியாக உள்ளன என்று துணை நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமாட் மஸ்லான் அறிவித்துள்ளார்.
நிதிச் சேவை, வர்த்தகம் மற்றும் முதலீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, சுற்றுலா, கல்வி, தகவல் தொடர்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலாச்சார பரிமாற்றம் ஆகியவற்றில் ஆசியான் - ஜப்பான் மூலோபாய ஒத்துழைப்பை விரிவுபடுத்த மலேசியாவும் ஆசியானும் உத்தேசித்துள்ளதாக அமாட் மஸ்லான் தெரிவித்தார்.
இதன் மூலம், மிகவும் வலுவான நிதிச் சூழலை உருவாக்கி, ஜப்பான் மற்றும் ஆசியான் நாடுகளுக்கும் பயனளிக்க முடியும் என்று சமீபத்தில் தென் கொரியாவில் நடைபெற்ற ஆசியானின் 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


