ஜப்பானுடன் நிதித் துறையில் புதிய ஒத்துழைப்பையும் கூட்டாண்மைகளையும் ஆராய்வதில் மலேசியாவும் ஆசியானும் உறுதியாக உள்ளன என்று துணை நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமாட் மஸ்லான் அறிவித்துள்ளார்.
நிதிச் சேவை, வர்த்தகம் மற்றும் முதலீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, சுற்றுலா, கல்வி, தகவல் தொடர்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலாச்சார பரிமாற்றம் ஆகியவற்றில் ஆசியான் - ஜப்பான் மூலோபாய ஒத்துழைப்பை விரிவுபடுத்த மலேசியாவும் ஆசியானும் உத்தேசித்துள்ளதாக அமாட் மஸ்லான் தெரிவித்தார்.
இதன் மூலம், மிகவும் வலுவான நிதிச் சூழலை உருவாக்கி, ஜப்பான் மற்றும் ஆசியான் நாடுகளுக்கும் பயனளிக்க முடியும் என்று சமீபத்தில் தென் கொரியாவில் நடைபெற்ற ஆசியானின் 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


