மலேசியாவின் முன்னணி விமான நிறுவனமான ஏர்ஏசியா, சீனாவிற்கான தனது புதிய வழித்தடத்தை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. கோலாலம்பூரில் இருந்து தென் சீனாவில் அமைந்துள்ள Quanzhou, Guilin மற்றும் Chengdu ஆகிய மூன்று பகுதிகளுக்கு ஏர்ஏசியா தனது சேவையை விரிவுப்படுத்தவிருக்கிறது.
வரும் ஜூலை 18 ஆம் தேதி, கோலாலம்பூரிலிருந்து சீனா, Quanzhou மற்றும் Guilin அனைத்துலக விமான நிலையத்திற்குச் சேவையை தொடங்கும் அதே வேளையில், ஜூலை முதல் தேதி Chengdu அனைத்துலக விமான நிலையத்திற்கு ஏர்ஏசியா சிறகை விரிக்கவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய வழித்தடங்களின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், 130 இடங்களுக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் உள்ளடக்கிய ஏர் ஏசியா, இன்று தொடங்கி மே 21 ஆம் தேதி வரை 20 சதவீதம் தள்ளுபடியை மக்களுக்கு வழங்குகிறது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்


