மலேசியாவின் முன்னணி விமான நிறுவனமான ஏர்ஏசியா, சீனாவிற்கான தனது புதிய வழித்தடத்தை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. கோலாலம்பூரில் இருந்து தென் சீனாவில் அமைந்துள்ள Quanzhou, Guilin மற்றும் Chengdu ஆகிய மூன்று பகுதிகளுக்கு ஏர்ஏசியா தனது சேவையை விரிவுப்படுத்தவிருக்கிறது.
வரும் ஜூலை 18 ஆம் தேதி, கோலாலம்பூரிலிருந்து சீனா, Quanzhou மற்றும் Guilin அனைத்துலக விமான நிலையத்திற்குச் சேவையை தொடங்கும் அதே வேளையில், ஜூலை முதல் தேதி Chengdu அனைத்துலக விமான நிலையத்திற்கு ஏர்ஏசியா சிறகை விரிக்கவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய வழித்தடங்களின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், 130 இடங்களுக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் உள்ளடக்கிய ஏர் ஏசியா, இன்று தொடங்கி மே 21 ஆம் தேதி வரை 20 சதவீதம் தள்ளுபடியை மக்களுக்கு வழங்குகிறது.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


