மலேசியாவின் முன்னணி விமான நிறுவனமான ஏர்ஏசியா, சீனாவிற்கான தனது புதிய வழித்தடத்தை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. கோலாலம்பூரில் இருந்து தென் சீனாவில் அமைந்துள்ள Quanzhou, Guilin மற்றும் Chengdu ஆகிய மூன்று பகுதிகளுக்கு ஏர்ஏசியா தனது சேவையை விரிவுப்படுத்தவிருக்கிறது.
வரும் ஜூலை 18 ஆம் தேதி, கோலாலம்பூரிலிருந்து சீனா, Quanzhou மற்றும் Guilin அனைத்துலக விமான நிலையத்திற்குச் சேவையை தொடங்கும் அதே வேளையில், ஜூலை முதல் தேதி Chengdu அனைத்துலக விமான நிலையத்திற்கு ஏர்ஏசியா சிறகை விரிக்கவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய வழித்தடங்களின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், 130 இடங்களுக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் உள்ளடக்கிய ஏர் ஏசியா, இன்று தொடங்கி மே 21 ஆம் தேதி வரை 20 சதவீதம் தள்ளுபடியை மக்களுக்கு வழங்குகிறது.

Related News

கருப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் கைது: கெடா குடிநுழைவுத்துறை அதிரடி

மலேசிய குடிநுழைவுத்துறையால் தேடப்படும் வங்காளதேச ஆடவர்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

உலகளவில் மலேசியாவுக்கு 7-வது இடம்: எடெல்மேன் நம்பகத்தன்மை அறிக்கை

வீட்டு நடனமே பெண்களின் ஆரோக்கிய ஆயுதம்: அசத்தும் மலேசியாவின் 63 வயது 'நடனத் தூதுவர்


