கோலாலம்பூர், ஆகஸ்ட் 04-
காயமுற்ற பாலஸ்தீனர்கள், மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிப்பதற்கான நோக்கத்தை அரசாங்கம் கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்றிரவு அறிவித்துள்ளார்.
பாலஸ்தீன் மக்களுக்கு மனிதாபிமான முறையில் உதவுவதற்கு ஒத்துழைத்து வரும் இதர நாடுகளுக்கு மலேசியா நன்றி கூற கடமைப்பட்டுள்ள வேளையில் காய முற்ற பாலஸ்தீனர்களை மலேசியாவிற்கு கொண்டு வந்து , சிகிச்சை அளிப்பதற்கான உரிய நிதி ஒதுக்கீட்டை மலேசிய அரசாங்கம் ஒதுக்கும் என்று பிரத்மர் குறிப்பிட்டார்.புக்கிட் ஜாலில் , Axiata அரங்கில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
பிரதமரின் பிரதான உரை இரவு 10.30 மணிக்கு மேல் தொடங்கியது.இந்த மாபெரும் ஆதரவு பேரணியில் பிரதமரின் உரை , நிகழ்விற்கு உச்சமாக அமைந்தது .








