Apr 1, 2026
Thisaigal NewsYouTube
சாலையை கடக்க முற்பட்ட வங்காளதேச மாது விபத்தில் பலி
தற்போதைய செய்திகள்

சாலையை கடக்க முற்பட்ட வங்காளதேச மாது விபத்தில் பலி

Share:

குவந்தான், டிச. 18-

குவந்தான், ஜாலான் குவந்தான், பைபாஸ்,, ஓர் எண்ணெய் நிலையத்திற்கு அருகில் சாலையை கடக்க முற்பட்ட ஒரு வங்காளதேப்பெண், காரினால் மோதப்பட்டு உயிரிழந்தார். நேற்று இரவு 11.50 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 21 வயது நஹேரிமா சுல்தானா நிஹாமோனி என்ற வங்காளதேசப் பிரிஜை உயிரிழந்ததாக போலீசார் அடையாளம் கூறினர்.

பெரோடுவா மைவீ காரினால் மோதப்பட்ட அந்த இளம்பெண், தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார். இதில் கார் ஓட்டநர் காயம் அடையவில்லை என்று குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் சஹாரி வான் புசு தெரிவித்தார்.

யாரும் எதிர்பார்க்காத நிலையில் அந்தப் பெண் மின்னல் வேகத்தில் சாலையில் கடக்க முற்பட்ட வேளையில் கார் ஓட்டுநர், அவரை மோதுவதிலிருந்து தவிர்க்க இயலவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி வான் மேலும் கூறினார்.

Related News

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு  சலுகை

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு சலுகை

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்