பினாங்கு தைப்பூச விழா கொண்டாடாட்டத்தில் நீடித்த பாரம்பரியத்தை கொண்டுள்ள நாட்டுக்கோட்டை செட்டியார்களின் தண்ணீர்மலை, அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்தினருக்கு மரியாதை அளிக்கும் வகையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தினர் தைப்பூச விழா கொண்டாட்ட முதல் பத்திரிகையை கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கினர்.

தண்ணீர்மலை, அருள்மிகு பாலதெண்டாயுதபாணி ஆலயத்தில் வரும் ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கலந்து கொள்ளும் வகையில் முதல் பத்திரிகையை பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயர், துணைத் தலைவர் டாக்டர் இரா. லிங்கேஸ்ரன், அற வாரியத்தின் ஆணையர் J. தினகரன் மற்றும் இதர பொறுப்பாளர்கள் இணைந்து வழங்கினர்.

Penang Street – டில் உள்ள நாட்டுக்கோட்டை செட்டியார்களின் கோவில் வீட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்தினர் சார்பாக அறங்காவலர் டாக்டர் நாராயணன், தைப்பூச விழா, முதல் பத்திரிகையை பினாங்கு இந்து அறப்பணி வாரியப் பொறுப்பாளர்களிடமிருந்து பெற்று கொண்டார்.
நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கோவில் நிர்வாகத்தினருடன் இணைந்து ஒற்றுமையாக தைப்பூச விழாவை கொண்டாடுவதற்கு உறுதி பூண்டுள்ள பினாங்கு இந்து அறப்பணி வாரியம், இவ்வருட தைப்பூச விழாவை இந்துக்களின் ஒருமைப்பாட்டு விழாவாக அறிவித்துள்ளது.








