Jun 29, 2026
Thisaigal NewsYouTube
எல்லை கடந்த குற்றச்செயல்களுக்கு டிரான்சிட் மையமாக பினாங்கு விளங்குகிறது
தற்போதைய செய்திகள்

எல்லை கடந்த குற்றச்செயல்களுக்கு டிரான்சிட் மையமாக பினாங்கு விளங்குகிறது

Share:

ஜார்ஜ்டவுன், நவம்பர்.28-

எல்லைக் கடந்த குற்றச்செயல்கள் தொடர்புடைய போக்குவரத்துக்கு பினாங்கு மாநிலம் பிரதான டிரான்சிட் மையமாக விளங்குகிறது என்று மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இந்தோனேசியா அருகில் பினாங்கு இருப்பதால், பூவியியல் அமைப்பு ரீதியாக எல்லை கடந்த குற்றச்செயல்களுக்கு கடத்தல்காரர்கள் பினாங்கை ஒரு தளமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்று கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் இடைக்காலத் துணை தலைமை இயக்குநர் லக்சமானா மூடா மாரிதிம் முகமட் ஸாவாவி அப்துல்லா தெரிவித்தார்.

போதைப் பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றசெயல்களுக்கான முக்கியப் போக்குவரத்துக்கு பினாங்கு பயன்படுத்தப்படுகிறது. பினாங்கு தீவு வீற்றிருக்கும் இடத்தின் புவியியல் தூரம் மிக நெருக்கமாக இருப்பதாலும், பிராந்தியப் பாதைகளின் நடுவில், மலேசியா இருப்பதாலும் கடத்தல் கும்பல்கள், மற்ற நாடுகளுக்கு தங்கள் பயணத்தைத் தொடர்வதற்கு அல்லது இடம் மாறுவதற்கு முன்பு பினாங்கில் நின்று விட்டு செல்லும் டிரான்சிட் மையமாக பயன்படுத்துகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

மலாக்கா நீரிணை நீர் நிலைகள் மத்தியில் பினாங்கு தனித்து நிற்கும் ஒரு தீவாக விளங்குவதை வரைப்படத்தில் தெளிவாகக் காண முடியும் என்று ஜார்ஜ்டவுனில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் முகமட் ஸாவாவி இதனைத் தெரிவித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு