Mar 15, 2026
Thisaigal NewsYouTube
ராயன் வழக்கில் எந்தவித வளர்ச்சியும் இல்லை
தற்போதைய செய்திகள்

ராயன் வழக்கில் எந்தவித வளர்ச்சியும் இல்லை

Share:

கோலாலம்பூர், ஜன - 8,

கடந்த மாதத் தொடக்கத்தில் ஆறு வயது சேன் ராயன் அப்துல் மாட்டின் கொலை வழக்கு விசாரணையில் எந்த புதிய வளர்ச்சியும் இல்லை என துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

விசாரணை இன்னும் நடந்து வருகின்ற நிலையில், ஏதேனும் புதிய தகவல் ஏதும் இருந்தால், நிச்சயமாக பகிரப்படும் என ஆயூப் கான் குறிப்பிட்டார்.

கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி, சேன் ராயனின் சடலம் பெத்தாலிங் ஜெயா, டமான்சாரா டாமாய்,அபார்டமென்ட் இடாமான் அருகே உள்ள வடிகாலில் இரவு 10 மணி அளவில் மீட்கப்பட்டது.

தொடக்கத்தில் சேன் ராயன்திடீர் மரணம் அடைந்தார் என வகைப்படுத்தப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு அது கொலை வழக்காக மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் இண்டர்போலின் உதவியை மலேசியக் காவல் துறை நாடியுள்ளது குறிப்பிடத் தக்கது

Related News