ஜூலை 27-
மலேசியாவில் குறைந்த பட்சம் 80 லட்சம் பதிவு செய்யப்பட்ட பயனர்களை கொண்ட அனைத்து சமூக உடகங்கள் மற்றும் இணைய தகவல் தொடர்புடைய அனைத்து சேவைகளுக்கும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூட சட்டத்தின் கீழ் முதல் நிலை லைசென்ஸ்சுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் புதிய கண்காணிப்புத்திட்ட நடைமுறைக்கு பிறகு மேற்கண்ட சேவை அளிப்பிற்கு லைசென்ஸை கொண்டிருக்கும் நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் அறிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் அதிகரித்து வரும் பகடிவதைகள், ஓன்லைன் மோசடி சம்பவங்கள் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச்செயல்கள் உட்பட இணைய குற்றச்செயல்களை ஒடுக்கும் நோக்கில் சமூக ஊடக பயனர்களுக்கு சேவை அளித்து வருகின்ற நிறுவனங்கள் இந்த முதல் நிலை உரிமத்தை கொண்டிப்பது அவசியமாகும் என்று அந்த ஆணையம் வலியுறுத்தியுள்ளது.








