அமைச்சரவை மறுசீரமைப்பு என்பது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஆக்ககரமான தனியுரிமை என்றும் அதற்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பாரிசான் நேசனலின் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் கூறினார்.
மக்களுக்கான தனது கடமைகளை நிறைவேற்ற சிறந்ததாக கருதும் அமைச்சரவைக் குழுவை அமைக்க பிரதமருக்கு முழு உரிமை உண்டு என புதிய உயர்கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஸம்ரி தெரிவித்துள்ளார்.
நிச்சயமாக அவர் சிறந்த மதிப்பீட்டைச் செய்த பின்னரே அமைச்சரவை மாற்றத்தை செய்துள்ளார், மக்களிடமிருந்து அவர் பெற்ற கருத்துகளின் அடிப்படையில் அவர் அந்த மறு சீரமைப்பைச் செய்துள்ளார் என்றார் ஸம்ரி.








