புத்ராஜெயா, ஏப்ரல்.29-
நாட்டின் 2025-ஆம் ஆண்டுக்கான வருமான வரி மதிப்பீட்டு ஆண்டிற்கான தனிநபர் வருமான வரிப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வரும் மே 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழில் சாரா வருமானம் ஈட்டும் தனிநபர்கள் தங்கள் வரிப் படிவங்களை e-Filing எனப்படும் மின்-தாக்கல் வழியாகச் சமர்ப்பிக்க கூடுதல் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக உள்நாட்டு வருமான வரி வாரியமான LHDN அறிவித்துள்ளது.
முன்னதாக நாளை ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த இந்த அவகாசம், தற்போது வரி செலுத்துவோர் வசதிக்காக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத் தவிப்புகளைத் தவிர்க்கவும், அபராதங்களைத் தவிர்க்கவும் தகுதியுள்ள பொதுமக்கள் இந்த நீட்டிக்கப்பட்ட காலத்தைப் பயன்படுத்தி முன்கூட்டியே வரி தாக்கல் செய்யுமாறு எல்.எச்.டி.என் (LHDN) அறிவுறுத்தியுள்ளது.








