Jul 5, 2026
Thisaigal NewsYouTube
போலி முதலீட்டுத் திட்டத்தில் 5 இலட்ச ரிங்கிட்டை இழந்த முதியவர்
தற்போதைய செய்திகள்

போலி முதலீட்டுத் திட்டத்தில் 5 இலட்ச ரிங்கிட்டை இழந்த முதியவர்

Share:

ஜோகூர் பாரு, ஜூன்.21-

முகநூலில் ஒரு முதலீட்டு விளம்பரத்தின் மூலம், 5 இலட்சத்து 35 ஆயிரத்து 766 ரிங்கிட்டை இழந்ததாக ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற முதியவர் கடந்த செவ்வாயன்று புகார் அளித்துள்ளார். அதிக லாபம் தருவதாகக் கூறிய பங்குச் சந்தை விளம்பரத்தைப் பார்த்து மார்ச் 13 அன்று ஈர்க்கப்பட்ட 57 வயதுடைய அந்த முதியவர், மார்ச் 13 முதல் ஜூன் 5 வரை ஐந்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 26 பணப் பரிவர்த்தனைகள் செய்துள்ளார். பணம் திரும்பக் கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார், மேலும் இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 420-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக ஸ்ரீ ஆலாம் மாவட்டக் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமட் சொஹைமி இஷாக் தெரிவித்தார்.

Related News