Mar 13, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா ராயாவில் கைகலப்பு: 6  நபர்கள் கைது
தற்போதைய செய்திகள்

மலாக்கா ராயாவில் கைகலப்பு: 6 நபர்கள் கைது

Share:

மலாக்கா, ஜனவரி.08-

மலாக்கா, மலாக்கா ராயாவில் இன்று அதிகாலையில் ஒரு Karaoke மற்றும் உணவக கேளிக்கை மையத்தில் கும்பல் ஒன்று கைகலப்பில் ஈடுபட்டது தொடர்பில் போலீசார் ஆறு பேரைக் கைது செய்துள்ளனர்.

அதிகாலை 4 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் துப்பாக்கி வேட்டு கிளப்பப்பட்டது தொடர்பில் போலீசார் புகார் ஒன்றைப் பெற்றுள்ளதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டஃபர் பாதிட் தெரிவித்தார்.

அந்த கேளிக்கை மையத்தில் நான்கு நபர்கள் சினமூட்டும் செயலில் ஈடுபட்டு வந்ததன் விளைவாகவே இந்தக் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட கும்பலிடமிருந்து போலீசார் ஒரு செயற்கைத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் அவர் விளக்கினார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்