Jan 28, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.91 ஆக உயர்வு
தற்போதைய செய்திகள்

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.91 ஆக உயர்வு

Share:

கோலாலம்பூர், ஜனவரி.28-

மலேசிய ரிங்கிட், அமெரிக்க டாலருக்கு எதிராக இன்று புதன்கிழமை மதிய இடைவேளையின் போது 3 ரிங்கிட் 91 சென் என்ற நிலைக்கு வலுவடைந்தது. சந்தையில் ஏற்பட்டுள்ள புதிய நம்பிக்கையின் காரணமாக, கடந்த சில அமர்வுகளாகத் தொடர்ந்து வரும் இந்த உயர்வு இன்றும் நீடித்தது. கடைசியாக 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி காணப்பட்ட இந்த வலுவான நிலை, தற்போது ரிங்கிட் பெற்று வரும் வேகத்தைக் காட்டுகிறது.

ரிங்கிட்டின் புதிய ஆதரவு நிலை 3 ரிங்கிட் 87 சென்னாக இருக்கும் என்று இதற்கு முன்பு, பொருளாதார நிபுணர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டின் நிதி சீர்திருத்தங்கள், கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் கொள்கை மறுசீரமைப்பு போன்றவை பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளன. இதன் விளைவாகவே ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதாகக் கருதப்படுகிறது.

Related News

தனது மனைவியைக் கேலி செய்தவரைத் தாக்கிய சிங்கப்பூர் ஆடவருக்கு 1,800 ரிங்கிட் அபராதம்

தனது மனைவியைக் கேலி செய்தவரைத் தாக்கிய சிங்கப்பூர் ஆடவருக்கு 1,800 ரிங்கிட் அபராதம்

பண்டிகை காலங்களில் 24 மணி நேரமும் செயல்படும் ETS ரயில் சேவை: அந்தோணி லோக் அறிவிப்பு

பண்டிகை காலங்களில் 24 மணி நேரமும் செயல்படும் ETS ரயில் சேவை: அந்தோணி லோக் அறிவிப்பு

‘கேப்டன் பிரபா' கும்பலைச் சேர்ந்த மூவர் புக்கிட் அமான் போலீசாரிடம் ஒப்படைப்பு

‘கேப்டன் பிரபா' கும்பலைச் சேர்ந்த மூவர் புக்கிட் அமான் போலீசாரிடம் ஒப்படைப்பு

தைப்பூசத்தை முன்னிட்டு 'மடானி பக்தி' திட்டம்: பத்துமலையில் மனித வள அமைச்சின் சிறப்புச் சேவைகள்

தைப்பூசத்தை முன்னிட்டு 'மடானி பக்தி' திட்டம்: பத்துமலையில் மனித வள அமைச்சின் சிறப்புச் சேவைகள்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு விசாரணை: தடயவியல், துப்பாக்கித் தோட்டா தொடர்பான அறிக்கைகளுக்காகக் காத்திருப்பதாக நாடாளுமன்றத்தில் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு விசாரணை: தடயவியல், துப்பாக்கித் தோட்டா தொடர்பான அறிக்கைகளுக்காகக் காத்திருப்பதாக நாடாளுமன்றத்தில் தகவல்

சிரம்பானில் 9 மணி நேரமாக காரினுள் விடப்பட்ட 2 வயது குழந்தை உயிரிழந்தது

சிரம்பானில் 9 மணி நேரமாக காரினுள் விடப்பட்ட 2 வயது குழந்தை உயிரிழந்தது