May 5, 2026
Thisaigal NewsYouTube
தனது மனைவியைக் கேலி செய்தவரைத் தாக்கிய சிங்கப்பூர் ஆடவருக்கு 1,800 ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

தனது மனைவியைக் கேலி செய்தவரைத் தாக்கிய சிங்கப்பூர் ஆடவருக்கு 1,800 ரிங்கிட் அபராதம்

Share:

பத்து பஹாட், ஜனவரி.28-

பத்து பஹாட் பொழுதுபோக்கு மையத்தில் தனது மனைவியைத் தொந்தரவு செய்த நபரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 41 வயது சிங்கப்பூர் பிரஜையான Seah Yan Sheng Romeo என்பவருக்கு பத்து பகாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 1,800 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

அந்த சிங்கப்பூர் பிரஜை, தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் பத்து பஹாட், தாமான் செத்தியா ஜெயாவில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் இந்த மோதல் நடந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட 33 வயது நபர் தனது மனைவியைத் தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்த ரோமியோ, அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட நபர் குற்றத்தை ஒப்பியதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் அருண் நோவல் டாஸ் இந்த அபராதத்தை விதித்தார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்